en thevaikalai arinthavar
என் தேவைகளை அறிந்தவர்
என் வழிகளையும் அறிந்தவரே-2
உம் கண் முன்பாக என்னை வைத்தவர்
என் கண்ணீரையும் துடைப்பவரே-2
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்-2
1.வனாந்திரத்தின் பாதையிலே கடந்து வந்தாலும்
வானத்தில் இருந்து மன்னாவை அனுப்ப
அதிகாரம் உடையவரே-2- எப்படிப்பா
2.கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும்
காகத்தைக் கொண்டும் என்னை போஷிக்க
வல்லமை உடையவரே-2- எப்படிப்பா
3.உமது வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் மனிதனுக்கு
விதவையைக் கொண்டும் போஷித்து நடத்த
விருப்பம் உடையவரே-2-எப்படிப்பா