என் பிதாவே வானத்து மெய்யான அப்பம் கொடுக்கிறார்.
Bread of God is He who comes down from heaven and gives life to the world. (John 6:33)
Ex16:4,8; Ps78:23; Hos11:4; Isa33;5; Eze4:17; Mk8:8; Mk14:18; Jn1:51; Jn6:33,35,41,50,55,58; Ga4:4,5; 1Jn5:20.
வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். (யோவான் 6:33)
யாத்திராகமம் 16:4,8; சங்கீதம் 78:23; ஓசியா 11:4; ஏசாயா 33;5; எசேக்கியேல் 4:17; மத்தேயு 8:8; மத்தேயு 14:18; யோவான் 1:51; யோவான் 6:33,35,41,50,55,58; கலாத்தியர் 4:4,5; 1 யோவான் 5:20.
பிதாவே கொடுக்கிறார்:
மெய்யான அப்பம் என்பது இயேசுவை குறிக்கின்றது. இந்த மெய்யான அப்பத்தை பிதாவே மனுஷனுக்கு உணவாக கொடுத்துள்ளார். மனுஷன் வேறு எந்த அப்பத்தினாலும் திருப்தியடையாமலிருப்பதினாலே, வேறு எவ்விதத்திலும் திருப்தியுள்ள வாழ்க்கை வாழ முடியாது என்பதினாலே இந்த இயேசு என்ற மெய் அப்பத்தை கொடுத்துள்ளார்.
பிதா கொடுக்கிறார்.
மனிதர்க்கு ஆகாரம் கொடுப்பவர் அவரே.
மனிதர்க்கு ஜீவன், சுகம், பெலன் கொடுப்பவர் அவரே,
மனிதர்க்கு நன்மை கொடுப்பவர் அவரே, மனிதர்க்கு நீண்ட ஆயுள் தருபவர் அவரே,
மனிதர்க்கு ஞானம், புத்தி, அறிவு தருபவர் அவரே.
இன்று முதல் நீர் பிதாவின் சுதனாக அனுப்பப்பட்ட இயேசுவை உண்மையாய் பின்பற்றுவீரானால் தம் குமாரனையே தந்தவர் அவரோடுகூட மீந்த யாவற்றையும் உமக்கு தருவார் என்பதில் சந்தேகமில்லை. ரோமர் 8:32.
எல்லாம் கொடுப்பவர் அவரே.
அவர் ஒருவருக்கும் எதையும் கொடுக்க வேண்டுமானால் தம் குமாரனின் அன்பு நாமத்தின் பேரிலேயே அவரிடம் வரவேண்டும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபித்தால் மட்டுமே யாவும் கிடைக்கும்.
அவர் உமக்கு கொடுப்பதற்கு எதையும் உம்மிடம் எதிர்பார்க்கவில்லை.
உம்மை மட்டுமே எதிர்பார்க்கிறார்.
அவர் கொடுத்தபின்போ உம்மிடம் கீழ்படிதலை, உண்மையை, உத்தமத்தை எதிர்பார்க்கின்றார். பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்ள எதிர்பார்க்கின்றார்.
கர்த்தாவே, உமது குமாரனை உமது அன்பினிமித்தம் எங்களுக்கு கொடுத்தீர். நாங்கள் உமக்கு முன்பாகவும், உம் குமாரனுக்கு முன்பாகவும் உண்மையும், உத்தமமும், கீழ்படிதலும் உள்ளவர்களாய் நடந்துவர எங்களுக்கு உதவி செய்தருளும்.