நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்.
You are of your father the devil, and the desires of your father you want to do. (John 8:44)
Jn8:38; Mt13:38; Act5:3; Act13:10; 2Co11:3,13-15; 2The2:9-11; Jas4:1-7;1Pet5:8;1Jn3:8-10,12; Rev9:11; Rev12:9; Rev13:14; Rev20:2,3,10; Rev21:8; Rev22:15.
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:44)
யோவான் 8:38; மத்தேயு 13:38; அப்போஸ்தலர் 5:3; அப்போஸ்தலர் 13:10; 2கொரிந்தியர் 11:3,13-15; 2தெசலோனிக்கேயர் 2:9-11; யாக்கோபு 4:1-7; 1பேதுரு 5:8; 1யோவான் 3:8-10,12; வெளி 9:11; வெளி 12:9; வெளி 13:14; வெளி 20:2,3,10; வெளி 21:8; வெளி 22:15.
பிசாசு:
தேவனுடைய விருப்பங்களுக்கு, கிரியைகளுக்கு மாறுபாடாக செயல்படுகிறவனே பிசாசு. யோவான் 8:44 ல் பிசாசின் காரியங்கள் குறித்து கர்த்தராகிய இயேசு பல உண்மைகளை தெரிவித்துள்ளார்.
- பிசாசு இச்சைகளையுடையவன். மாற்கு 4:18,19; ரோமர் 1:24; ரோமர் 6:12; எபேசியர் 2:3; 2பேதுரு 2:18.
- பிசாசு ஆதியில் உள்ளவன். தேவனோடிருந்தவன். தேவனால் படைக்கப்பட்டவன். கலகம் விளைவித்தவன். வெளியேற்றப்பட்டவன். ஆகையினால் பல விஷயங்களை அறிந்துள்ளான்.
- பிசாசு மனுஷ கொலைபாதகன். வார்த்தையினாலும், செயலினாலும் கொலை செய்கிறவன். 1யோவான் 3:15; ஆதி4.
- பிசாசிடம் சத்தியம் இல்லை. சத்தியம் இவனுக்கு சொன்னாலும் இவனில் இடம் பெறுவதில்லை. 1இராஜாக்கள் 22:22; 1நாளாகமம் 21:1; அப்போஸ்தலர் 5:3; லூக்கா 22:3; யோவான் 13:2.
- பிசாசு பொய்யனாகவும், பொய்யர்களுக்கு பிதாவுமாயிருக்கிறான். இல்லாததை இருப்பதாக சொல்லுவதும், இருப்பதை இல்லையென்று சொல்லுவதும், உள்ளதை மாற்றிசொல்லுவதும் பொய்மையே. அப்போஸ்தலர் 5:3; ரோமர் 1:25; 2தெசலோனிக்கேயர் 2:9,12; 1தீமோத்தேயு 6:20.
- பிசாசு சொந்தமாய் பேசுவான். அதிக விளக்கம் கொடுத்து நம்ப வைப்பான். விவிலியத்துக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று ஆவியின் நீரோட்டத்துக்கு எதிராக போதிக்கின்றவன். சொந்தமாய் பேசுகிறான். மனதில் தோன்றுவதை பேசுவதே பொய்யின் ஆவியாகும். எரேமியா 23:21,31
இந்த பிசாசின் செயல்கள் கொண்டிருந்த இஸ்ராயேலர் இயேசுவுக்கு எதிர்த்து நின்று இதுவரையிலும் வேதனைகளை அனுபவிப்பதுபோல நாமும் தேவனுடைய ஆவிக்கு எதிர்த்து நிற்காதிருப்போம்.
கர்த்தாவே நாங்கள் பிசாசின் குணநலங்களையுடையவர்களாய் இராமல் கிறிஸ்துவின் குணங்களை உடையவர்களாய் இருக்க உம் ஆவியினால் எங்களை நிரப்பும்.