கிறிஸ்துவுக்குள் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட பிறகு பெயர் மாற்றம் அவசியமா?
இன்றைக்கு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட உடனே நம்முடைய பெயரை மாற்ற வேண்டும் என்று அநேகர் சொல்லுகிறார்கள் அது அவசியமா?
எதற்காக நம்முடைய பெயரை மாற்ற வேண்டும் என்கிறார்கள்?
எதற்காக பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்?
அதற்கு அவர்கள் சொல்லக் கூடிய காரணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் கொடுத்த பிரமாணத்தை தான் மேற்கோள் காண்பிக்கிறார்கள்.
யாத்திராகமம் 23:13 நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
யோசுவா 23:7 உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும்,,,,,,,,, எச்சரிக்கையாயிருங்கள்.
நாம் அந்நிய தேவர்களின் பெயரை சொல்லக்கூடாது. அதை வாயிலிருந்து உச்சரிக்கவும் கூடாது. ஏனென்றால் அது பாவம் என்று சொல்லுகிறார்கள்.
அந்நிய தேவர்களின் பெயரை உச்சரித்தால் அவர்கள் நினைவுக்கு வந்து விடுவார்கள் அது பாவம் என்கிறார்கள்.
அதனால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு பிறகு நம்முடைய பெயரை மாற்ற வேண்டும் என்று போதிக்கிறார்கள்.
இப்படி போதிக்கிற எத்தனை ஊழியக்காரர்கள் தங்களுடைய பெயர்களை மாற்றம் செய்து இருக்கிறார்கள்?
அநேகர் தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொள்ளுவதும் இல்லை அதை அவர்கள் விரும்புவதும் இல்லை.
சில ஊழியர்கள் தங்களுடைய பெயரை நியூமராலஜி படி மாற்றிக் கொண்டவர்கள் உண்டு.
நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறுகின்ற போது என்ன சம்பவிக்கிறது?
கலாத்தியர் 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
நாம் கிறிஸ்துவை தரித்து கொள்ளுகிறோம்
நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெறுகின்ற போது ஜீவபுஸ்தகத்தில் என்ன பெயரை எழுதுவார்?
பிலிப்பியர் 4:3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
நாம் எந்த தேசத்தில் பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து ஸ்திரப்படுத்துகிறவர் தேவன் தான்.
சங்கீதம் 87:4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
சங்கீதம் 87:5 சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
நம்முடைய பெயர்களை கூட தேவன் தான் எழுதுகிறார்.
சங்கீதம் 87:6 கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)
பிரசங்கி 6:10 இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.
இப்போது கேள்வி இது தான் நமக்கு தேவை மன மாற்றமா அல்லது பெயர் மாற்றமா?
அநேகர் சொல்லுகிறார்கள் பெயரை மாற்றினால் போதும் அவர் கிறிஸ்தவராகி விடுவார் என்கிறார்கள்.
தேவன் அப்படி தான் சொல்லுகிறாரா?
நேபுகாத் நேச்சரால் அக்கினி ஜீவாலையில் கொண்டு போய் போடப்பட்ட சாத்ராக் மோஷாக் ஆபேத்நேகோவைப் பற்றி நாம் என்ன அறிந்து வைத்து இருக்கிறோம்.
பிரசங்கம் செய்யும் போது கூட அந்த பெயர்களை சொல்லி தான் வைராக்கியமாய் பிரசங்கம் செய்கிறோம்.
ஆனால் இந்த மூன்று பேருடைய பெயர்களும் பாபிலோனிய கடவுளின் பெயர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
தானியேல் 1:6 அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
தானியேல் 1:7 பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
பாபிலோனிய கடவுளின் பெயர்களுக்கு வைக்கப்பட்டதினால் இவர்கள் விசுவாசத்தில் குறைந்து போய் விட்டார்களா அல்லது அந்த பெயர் வைக்கப்பட்டதினால் தேவன் இவர்களை புறகணித்து போட்டாரா?
தேவனுக்காக தங்களுடைய ஜீவனை கொடுக்கிற அளவில் அவர்கள் விசுவாசம் பெருகி இருந்தது
தானியேல் 3:17 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
தானியேல் 3:18 விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
தேவனுக்காக வாழ்வது என்பது நம்முடைய பெயரில் இல்லை அது உள்ளான மனுஷனில் இருக்கிறது.
2கொரிந்தியர் 4:16 ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
புதிய ஏற்பாட்டிலில் பவுலோடு சேர்ந்து ஊழியம் செய்த அப்பொல்லோ என்பவரின் பெயர் ஒரு கிரேக்க கடவுளின் பெயர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
அந்த பெயரை மாற்ற வேண்டும் என்று பவுலோ அல்லது அப்பொல்லோவோ அல்லது பரிசுத்த ஆவியானவரோ சொல்லவில்லை.
அப்பெல்லோ பவுலோடு சேர்ந்து ஊழியம் செய்து கொண்டு இருந்த போது முன் மாதிரியாக மற்றவர்கள் நடக்கும் படி பவுல் தன்னுடைய பெயரோடு அவருடைய பெயரையும் சேர்ந்து குறிப்பிட்டு இருக்கிறார்.
நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன் என்று கொரிந்து சபையாரில் சிலர் சொல்லுகிற அளவுக்கு அவருடைய பெயர் பிரபலமாய் இருந்தது.
1கொரிந்தியர் 1:12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
1கொரிந்தியர் 3:4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?
எழுதப்பட்டத்திற்கு மிஞ்சி எண்ண வேண்டாமென்று பவுல் தன்னோடு கூட அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து எழுதினார்.
1கொரிந்தியர் 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும்,,,,,,, நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
மனுஷன்தான் பெயரையும் முகத்தையும் பார்ப்பான் ஆனால் தேவனோ அவனுடைய உள்ளான மனுஷனுடைய கிரியைகளை தான் பார்க்கிறார்.
நாம் இன்றைக்கு பயன்படுத்துகிற ஜனவரி பிப்ரவரி போன்ற பனிரெண்டு மாதங்களில் சில மாதங்கள் ரோமானிய கடவுளின் பெயர்கள் தான்.
அதற்காக அந்த பெயரை நாம் பயன்படுத்தாமலா இருக்கிறோம்?
இன்றைக்கு நிறைய ஊர்களும் தெருக்களும் பெரும்பாலும் விக்கிர பெயர்கள் தான் இருக்கிறது அதற்காக அந்த பெயரை அழைக்காமாலா இருக்கிறோம்?
நாம் பயன்படுத்துகிற ஞாயிறு திங்கள் போன்ற கிழமைகள் எல்லாம் அவர்கள் வணங்குகிற கடவுளின் பெயர்கள் என்பதினாலே நாம் அதை பயன்படுத்தாமல் இருக்கிறோமா?
ஒருவன் கிறிஸ்துவுக்குள் வரும் போது தேவன் அவனிடத்தில் பெயர் மாற்றத்தை அல்ல மன மாற்றத்தை தான் விரும்புகிறார்.
ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
நாம் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரிக்க கூடாது.
நம்முடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக வேண்டும்.
நாம் கிறிஸ்துவுக்குள் வந்த பிறகு வேத வாக்கியத்தில் இருக்க கூடிய ஒரு பெயரை தெரிந்து கொண்டு அந்த பெயருக்கு தன்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால் அரசாங்க சட்டத்திட்டங்களின்படி அவருடைய பெயரை மாற்றிக் கொள்ளலாம் அது பாவமல்ல.
ஆனால் இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் தங்களுக்கு பிறக்ககூடிய குழந்தைகளுக்கு கிறிஸ்தவ பெயர்களோ அல்லது வேதாகம பெயர்களோ வைக்காமல் பொதுவான பெயரை வைப்பார்கள்.
அந்த பெயர் எந்த மதத்தை சேர்ந்த பெயர் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அரசாங்கமே குழம்பி போகிற அளவுக்கு இருக்கும்,
காரணம் என்னவென்றால் அரசாங்க வேலைக்காகவும் சலுகைக்காகவும் அப்படிப்பட்ட பெயரை வைப்பார்கள்.
அரசாங்க சலுகைக்காகவும் அரசாங்க வேலைக்காகவும் கிறிஸ்தவன் என்பதை மறைத்து அரசாங்கத்தை ஏமாற்றுவது தான் பாவமாய் இருக்கிறது.
இப்படி பட்டவர்கள் உலகத்தில் இருந்து பிரிந்து வராமல் உலகத்திற்கு ஒத்த வேஷம் போடுகிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அனலும் அல்லாமல் குளிரும் அல்லாமல் இருப்பவர்கள்.
இவர்களைப் பற்றி தேவனுடைய தீர்ப்பு என்ன?
வெளி 3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
வெளி 3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.