கிறிஸ்து உயிர்த்தெழுந்து மூடப்பட்டிருந்த கல்லறையில் இருந்து எப்படி வெளியே வந்தார்

கிறிஸ்து உயிர்த்தெழுந்து மூடப்பட்டிருந்த கல்லறையில் இருந்து எப்படி வெளியே வந்தார்?

இயேசு ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அவருடைய பிரேத சீலை சாட்சியாக இருந்தது அதைக்குறித்து நாம் பார்த்து இருக்கிறோம் (இரண்டாவது பகுதி).

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும், லாசருவின் உயிர்த்தெழுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை வேத வாக்கியங்களை கொண்டு முன்பதாகவே பார்த்து இருக்கிறோம் (மூன்றாவது பகுதி).

இப்போது கிறிஸ்து மூடப்பட்ட கல்லறையில் இருந்து எப்படி வெளியே வந்தார் என்று நாம் பார்க்கப்போகிறோம்

ஸ்திரீகள் கல்லறையை பார்க்க வந்தபோது என்ன நடந்தது ?

மத்தேயு 28:1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.

மத்தேயு 28:2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

மத்தேயு 28:3 அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

இந்த வசனத்தில் கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து கல்லைப் புரட்டித்தள்ளிய போது உள்ளே கிறிஸ்து இருந்தாரா அல்லது அதற்கு முன்பதாக உயிர்த்தெழுந்து போய்விட்டாரா?

உள்ளே இயேசு கிறிஸ்து  அங்கே இல்லை. கல்லை கர்த்தருடைய தூதன் புரட்டுவதற்கு முன்பதாக இயேசு அங்கே இல்லை அவர் உயிர்த்தெழுந்து வெளியே போய் விட்டார்.

அந்த தூதன் அங்கேயிருந்த ஸ்திரீகளிடம் என்ன சொன்னார்?

மத்தேயு 28:5 தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

மத்தேயு 28:6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

கல்லறையின் கல் அடைக்கப்பட்டு இருந்தது ஆனால் கிறிஸ்து உள்ளே இல்லை எப்படி இது எப்படி நடந்தது?

லாசரு உயிர்த்தெழுந்த பிறகு கல்லறையை விட்டு வெளியே வருவதற்கு கல்லறையின் கல் புரட்டி தள்ளப்பட வேண்டியதாய் இருந்தது.

யோவான் 11:38 ,,,, அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.

யோவான் 11:41 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். ,,,,,,

  • இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்த படியினாலே கல்லறையிலிருந்து வெளியே வருதற்கு கல்லறையை மூடியிருந்த கல்லை யாரும் புரட்டித்தள்ள யாரும் தேவைப்படவில்லை.
  • கல் வாயிலேலே வைக்கப்பட்டு இருந்தது என்றால் இயேசு கிறிஸ்து எப்படி உயிர்த்தெழுந்து வெளியே போனார்?
  • இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்துவெளியே கல் அடைக்கப்பட்டு இருக்கும் போதே வெளியே போனார்
  • மாம்ச சரீரத்தில் உயிர்தெழுந்து இருப்பார் என்றால் அது நிச்சயமாக சாத்தியமில்லை.
  • இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தபடியால் தான் அவர் மூடப்பட்ட கல்லறையில் இருந்து வெளியே வரமுடிந்தது.

இயேசு கிறிஸ்து வீட்டுக்குள் இருந்த அப்போஸ்தலர்களுக்கு எப்படி தரிசனமானார்?

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாளிலே  அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாகும் போது கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது.

யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 20:20 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

  • வாரத்தின் முதல்நாளிலே இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு தரிசனமாகும் போது கதவுகள் பூட்டியிருக்கையில் இயேசு நடுவே நின்று உங்களுக்கு சமாதானம் என்றார்.
  • பூட்டப்பட்ட கதவு இருக்கிறது இயேசு கிறிஸ்து எப்படி அவர்கள் நடுவே வர முடியும் என்பதற்கான பதில் இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்.
  • லாசருவைப் போல இயேசு கிறிஸ்து மாம்ச சரீரத்தில் உயிர்தெழுந்து இருப்பார் என்றால் இயேசு பூட்டப்பட்ட கதவு வழியாகவோ அல்லது மற்றெந்த வழியாகவே கடந்து உள்ளே வர முடியாது.

எட்டு நாளைக்கு பின்பு இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு தரிசனமாகும் போது கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது.

யோவான் 20:26 மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

  • இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு யோவான் நமக்கு பலமான சாட்சியை தருகிறார்.
  • இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் ஒரு வீட்டுக்குள்ளே இருந்தார்கள் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது இருந்தது ஆனால் இயேசு கிறிஸ்து அவர்கள் நடுவே நின்று உங்களுக்கு சமாதானம் என்றார்.
  • இயேசு கிறிஸ்து கதவு வழியாக உள்ளே வரவில்லை. ஏனென்றால் அவர் ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தபடியால் அவரால் உள்ளே திடீரென்று தரிசனமாக முடிந்தது.

தொடர்ந்து கிறிஸ்துவின் ஆவிக்குரிய உயிர்த்தெழுதலைக் குறித்து கர்த்தருக்கு சித்தமானால் கற்றுக்கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME