அவளால் என்ன செய்யக் கூடுமோ அதை அவள் செய்தாள்

அவளால் என்ன செய்யக் கூடுமோ அதை அவள் செய்தாள்

வேதாகமத்தில் அநேக ஸ்திரீகள் இருந்தாலும் கிறிஸ்துவினிடத்தில் அவருடைய வார்த்தைகளை கேட்பதற்காக அவருடைய பாதபடியை தெரிந்து கொண்ட மரியாள் ஒரு விசேஷமான ஸ்திரீ தான்.

அவளுடைய விசுவாசம் முழுவதும் இயேசு கிறிஸ்து போதித்த அந்த தேவனுடைய வார்த்தையின் மீது தான் இருந்தது.

மார்த்தாள் இயேசு கிறிஸ்துவை உபசரிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டது நல்ல செயல் என்றாலும் முதலாவது தேவனுடைய வார்த்தைகளை கேட்பதை தெரிந்து கொள்ளாதது இங்கே நல்ல செயல் அல்ல.

மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள்-தேவனிடத்தில் முன்னுரிமைகள் என்பது இருக்கிறது.

லூக்கா 10:38 பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

லூக்கா 10:39 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

லூக்கா 10:40 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

லூக்கா 10:41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக்கா 10:42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

மார்த்தாள் தன்னுடைய கவனத்தை அவசியமான காரியங்களுக்கு திருப்பினார்.

லூக்கா 10:40 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

உணவு என்பது நாம் கவனிக்க வேண்டிய அவசியமான ஒரு காரியமாக இருக்கிறது.

1தீமோத்தேயு 6:7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.

1தீமோத்தேயு 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.

அதைவிட அதிக முக்கியமான தேவை உள்ளது அதை சிலர் மாத்திரம் பூர்த்தி செய்ய தேடுகிறார்கள்.

லூக்கா 10:42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

உலக மூலக்கூற்றுக்களை விட ஜெபிப்பதும் தேவனுடைய வார்த்தைகளை பிரசங்கிப்பதும் கேட்பதும் அதிக அவசியமானது.

அப்போஸ்தலர் 6:1 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

அப்போஸ்தலர் 6:2 அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.

அப்போஸ்தலர் 6:3 ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.

அப்போஸ்தலர் 6:4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்

தேவனுடைய ராஜ்யத்தில் நற்கிரியைகளை என்பதும் சிறப்பான கிரியை என்பதும் உள்ளது.

2தீமோத்தேயு 2:20 ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.

2தீமோத்தேயு 2:21 ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.

  • மிகச் சிறந்த கிரியைகளை செய்யும்படி நம்மை முதலில் ஆயத்தமாக்க வேண்டிய நம்முடைய பாகம் உள்ளது.

திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிற மூப்பர்களை அதிக கனத்திற்கு பாத்திரராக எண்ண வேண்டும்.

1தீமோத்தேயு 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

நம்முடைய முன்னுரிமைகள் உலக பொருட்களை உட்படுத்தினதாய் இருக்க கூடாது

மத்தேயு 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

மத்தேயு 6:20 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

மத்தேயு 6:21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

நம்முடைய தெரிந்து கொள்ளுதலை நாம் தெளிவாக தேர்வு செய்ய வேண்டும்.

மத்தேயு 6:24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

  • பரிசேயர்கள் தேவனையும் உலகப்பொருட்களையும் சேவிக்க முயற்சித்தார்கள்.
  • தேவன் அவர்களை புறக்கணித்தார். ஏனெனில் அவர்கள் அவரை மாத்திரம் சேவிப்பதை தெரிந்து கொள்ளவில்லை.

தேவனை மாத்திரம் சேவிக்கும்படி இயேசு நமக்கு கட்டளையிட்டுள்ளார்.

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

நாம் மனிதரை அல்ல தேவனை மாத்திரம் சேவிக்க வேண்டும்.

1கொரிந்தியர் 7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.

நாம் மனிதர்களை சேவிக்கிறோம். ஏனெனில் இயேசு கிறிஸ்து அவர்களை சேவிக்கும்படி கட்டளையிட்டுள்ளார்.

பிறனை அன்பு கூறு என்று இயேசு கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டுள்ளார்.

மத்தேயு 22:36 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.

மத்தேயு 22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

மத்தேயு 22:38 இது முதலாம் பிரதான கற்பனை.

மத்தேயு 22:39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

மத்தேயு 22:40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

  • நாம் நம்முடைய பிறனை சேவிக்கிறோம். ஏனெனில் இயேசு கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டுள்ளார்.

முதலில் நாம் என்ன தேட வேண்டும் என்று கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டுள்ளார்?

மத்தேயு 6:25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

மத்தேயு 6:26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

மத்தேயு 6:27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

மத்தேயு 6:28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

மத்தேயு 6:29 என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 6:30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

மத்தேயு 6:31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.

மத்தேயு 6:32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

  • நாம் முதலாவது தேவனுக்குரியவைகளை தேடும் போது தேவன் நம்முடைய தேவைகளை அவர் சந்திக்கக்கூடியவராக இருக்கிறார்.
  • தேவன் நமக்கு கொடுக்கக்கூடியது எல்லாம் தேவனுடைய தயவு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தேவனிடத்தில் மதிப்புள்ளவைகள் அவருக்கு விலையேறப்பெற்றது.

1பேதுரு 3:3 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

1பேதுரு 3:4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

தேவன் மிகவும் உயர்வான தெரிந்தெடுத்தல் தாழ்மையாக இருக்கிறது.

1பேதுரு 5:5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டதினால் இயேசு தேவனை பிரியப்படுத்தினார்.

எபிரெயர் 5:8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,

எபிரெயர் 5:9 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,

இயேசு கிறிஸ்துவின் தாழ்மை அவருக்கு மிகப் பெரிய பலனிற்கு ஏதுவாக இருந்தது.

பிலிப்பியர் 2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

பிலிப்பியர் 2:7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

பிலிப்பியர் 2:9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

பிலிப்பியர் 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

பிலிப்பியர் 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

தேவனுடைய பரிசுத்த ஸ்திரீகளுக்கு எப்போதும் தாழ்மையே குறிக்கோளாக இருக்கும்.

1பேதுரு 3:5 இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.

1பேதுரு 3:6 அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

அன்னாள் தேவனை சேவித்து சாமுவேலையும் தேவனை சேவிக்க போதித்தார்.

1சாமுவேல் 1:27 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

1சாமுவேல் 1:28 ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

எஸ்தர் பெரியவளாய் இருந்தாள் ஏனெனில் அவள் தன்னுடைய ஜனங்களை பாதுகாக்க அவள் தன்னுடைய தேவனை சேவித்தாள்.

எஸ்தர் 4:13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

எஸ்தர் 4:14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

எஸ்தர் 4:15 அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது:

எஸ்தர் 4:16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

  • அவளுடைய விசுவாசம் அவளுடைய அழகின் மீது இல்லை.
  • அவளுடைய விசுவாசம் தேவனை சேவிக்கத்தக்க தன்னுடைய ஜீவனையும் இழந்து போக ஆயத்தமாக இருந்தாள்.

மனுஷருக்காக அல்ல தேவனுக்காக சேவிக்க வேண்டும்.

எபேசியர் 6:5 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;

எபேசியர் 6:6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.

எபேசியர் 6:7 அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து,

எபேசியர் 6:8 மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.

தேவனுடைய ஸ்திரீகள் மற்றும் அநேக தாழ்மையான வழிகளினாலும் தேவனை கனப்படுத்த முடியும்.

மத்தேயு 5:16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

எல்லாவற்றிற்க்கும் மேலாக ஆவிக்குரிய யுத்தத்தில் அவசியம் சண்டையிட வேண்டும்.

பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

தேவனுடைய ஸ்திரீகள் சண்டையிட விசேஷமான யுத்தம் இருக்கிறது.

1தீமோத்தேயு 2:9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,

1தீமோத்தேயு 2:10 தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

  • நற்கிரியைகளினால் தேவபக்திள்ள இருதயம் உள்ளவர்கள் என்பதை காண்பிக்க வேண்டும்.

யோப்பா பட்டணத்தில் நற்கிரியைகளை மிகுதியாய்ச் செய்து கொண்டு வந்தாள்.

அப்போஸ்தலர் 9:36 யோப்பா பட்டணத்தில் கிரேக்குப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.

தொற்காள் கிறிஸ்துவினிடத்தில் அன்பு செலுத்தி அவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தபடியினால் சீஷி என்று அறியப்பட்டு இருந்தாள்.

யோவான் 13:34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

யோவான் 13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

அதிக கனிகளை கொடுப்பதினால் நம்முடைய பிதா மகிமைப்படுவார்.

யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

ஒவ்வொரு நற்கிரியையும் தேவனுக்காக கனி கொடுப்பதாக கணக்கிடப்படுகிறது.

கொலோசெயர் 1:10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,

அதிக கனிகளை கொடுக்க தாழ்மைதான் சாவியாக இருக்கிறது.

5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
1 பேதுரு 5:5

பரிசுத்த ஸ்திரீகள் மற்ற எல்லாருக்கும் மேலாக தேவனைத்தான் முதலிடத்தில் வைப்பார்கள்.

எபிரெயர் 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

நம்முடைய அரசாங்க சட்டங்களுக்கு கீழ்ப்படியும்படி தேவன் நமக்கு கட்டளையிட்டுள்ளார்

ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

  • நாம் ஒருவேளை இதை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் இது தான் உண்மையா?
  • நாம் யோபுவை பார்த்தால் தேவன் பிசாசின் விருப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.
  • அதை போல் தான் தேவன் இந்த அரசாங்கத்தை பயன்படுத்தி தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.

அரசாங்கத்திற்கு கீழ்ப்படிவதற்கு முன்பு தேவனுக்கு கீழ்ப்படிவது முதலில் வரவேண்டும்.

அப்போஸ்தலர் 4:18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அப்போஸ்தலர் 4:19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

அப்போஸ்தலர் 4:20 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.

புருஷனுக்கு கீழ்ப்படிவதற்கு முன்பு கிறிஸ்துவிற்கு கீழ்ப்படிகிற கீழ்ப்படிதல் வர வேண்டும்.

எபேசியர் 5:22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.

  • கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் மனைவி புருஷனுக்கு கீழ்ப்படிய முடியாது.

கிறிஸ்துவை அன்பு கூறுவதற்கு பிறகு இரண்டாவதாக நம்முடைய பிள்ளைகளை அன்பு கூற வேண்டும்.

தீத்து 2:4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,

நித்தியத்தில் தாழ்மையுள்ளவர்களை முதலில் வைக்க போவதாக தேவன் திட்டமிட்டுள்ளார்.

லூக்கா 10:41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக்கா 10:42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

  • தேவனுடைய ராஜ்யத்தில் ஒவ்வொரு தேவபக்தியுள்ள ஸ்திரீகளும் தேவனுக்கு அவசியமானவர்களாக இருக்கிறார்கள்.

நித்தியத்தில் தாழ்மையுள்ளவர்களை முதலில் வைக்க போவதாக தேவன் திட்டமிட்டுள்ளார்.

மத்தேயு 19:28 அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

மத்தேயு 19:30 ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.

  • தேவனிடத்தில் தாழ்மையுள்ளவர்கள் அவருக்காக எதுவென்றையும் இழக்க தயாராய் இருப்பார்கள்.
  • தாழ்மையுள்ளவர்கள் தேவனையும் அவருக்குரியதையும் முதலாவது தேடி அதன்படி செய்வார்கள்.

இரண்டு காசுகளை வைத்திருந்த விதவை அதைக் கொண்டு அதிகமாக ஒன்றும் செய்துவிட முடியாது.

லூக்கா 21:2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:

லூக்கா 21:3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  • நற்கிரியைகளை நம்முடைய கர்த்தர் பார்த்துக் கொண்டு இருக்கிறார் பெரிய காரியங்களை அவர் பார்த்துக் கொண்டு இருக்கிற தில்லை.
  • அந்த ஏழை விதவை தன் வறுமையிலிருந்து தன் ஜீவனுக்கு உண்டாயிருந்தெல்லாம்  கர்த்தருக்காக கொடுத்தது கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றதாய் இருந்தது.
  • அந்த விதவையின் இரண்டு காசை தேவனுக்கு கொடுத்ததினாலே அவள் தேவனால் கனப்படுத்தப்பட்டாள்.

மரியாள் கிறிஸ்துவின் சரீரத்தில் பரிமள தைலம் பூசியதைக் காட்டிலும் அதை கொண்டு அவளால் வேறு எந்த மேன்மையான காரியத்தையும்  செய்தவிட முடியாது.

மாற்கு 14:8இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.

மாற்கு 14:9 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  • தன்னிடத்தில் உள்ளதை கொண்டு அவளால் என்ன செய்ய முடியுமோ அதை அவள் செய்தாள்.
  • அவள் செய்தது கிறிஸ்துவின் பார்வையில் விலையேறப்பெற்றது அதனால் இன்றைக்கு வரைக்கும் அவள் செய்தது எல்லாராலும் பேசப்படுகிறது.

நம்மால் இயன்றது என்னவோ அதை தான் நம்மால் செய்ய முடியும்.

ரோமர் 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

நாம் இந்த உலகத்தை விட்டு போன பிறகு இவைகள் யாருடையவைகள் ஆகும்?

லூக்கா 12:16 அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.

லூக்கா 12:17 அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;

லூக்கா 12:18 நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,

லூக்கா 12:19 பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

லூக்கா 12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

லூக்கா 12:21 தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

இந்த ஜீவனில் நாம் பிரயாசப்பட்ட நம்முடைய எல்லா கிரியைகளுக்கும் என்ன சம்பவிக்க போகிறது?

லூக்கா 12:21 தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

  • நம் எல்லாரையும் ஞானமுள்ளவர்களாக இருக்க தேவன் நமக்கு உதவி செய்ய வேண்டும்.
  • தேவனிடத்தில் மாத்திரம் ஐசுவர்யவான்களாக இருக்க தேவன் நமக்கு உதவி செய்ய வேண்டும்.
Comments
  1. Mathivanan

    Teach about baptism compare all

ADD YOUR COMMENT

Powered By Indic IME