பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
Pharisees answered them, Are you also deceived? (John 7:47)
Lk21:8; 1Cor6:9; 1Cor15:33; Gal6:7; Tit3:3; Rev18:23; Jn7:12; Jn9:27-34; Mt27:63; 2Co6:8; 2Kin18:29,32; 2Chr32:15.
அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? (யோவான் 7:47)
லூக்கா 21:8; 1கொரிந்தியர் 6:9; 1கொரிந்தியர் 15:33; கலாத்தியர் 6:7; தீத்து 3:3; வெளி 18:23; யோவான் 7:12; யோவான் 9:27-34; மத்தேயு 27:63; 2கொரிந்தியர் 6:8; 2 இராஜாக்கள் 18:29,32; 2நாளாகமம் 32:15
கிறிஸ்தவம் வஞ்சிக்கும் மதமல்ல. மதங்கள் மனிதனுடைய ஆன்ம ஈடேற்றத்திற்காக உருவாக்கப்பட்டவைகள்.
கடவுளோடு மனிதகுலம் இணைந்து செல்லும்படியாய் ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய மதங்கள் பலவாறாக பிரிந்து காணப்பட்டாலும் ஏதோ ஒரு மதம் மட்டுமே உண்மையுடையதாய் காணப்படும்.
அவ்விதம் கவனத்தில் கொண்டால் வாழ்க்கை முறையிலும், உபதேசத்திலும் மிகவும் எளிமையாக எல்லா மனுகுலத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இடத்தில் இருப்பது கிறிஸ்தவ மதம் மட்டுமே.
இந்த கிறிஸ்தவ மதம் மனிதகுலத்தை வஞ்சித்து ஏமாற்றி திசைதிருப்பும் மதமல்ல.
மதங்களாலும், இனங்களாலும் வஞ்சிக்கப்பட்டு ஆன்மா ஈடேற்றத்தையும், எதிர்கால நம்பிக்கையையும் இழந்துபோன மனுகுலத்தை நேர்வழிக்கு கொண்டுவர தேவாதி தேவனால் ஏற்படுத்தபட்ட மதமாகும்.
இந்த கிறிஸ்தவ மதத்தின் உயரிய தன்மைகளை வாழ்க்கை, உபதேசம் மூலம் மனுகுலத்துக்கு கொண்டு வந்தவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. கிறிஸ்துவானவர் யூத சமயத்தின் தொட்டில் குழந்தையாவார்.
யூத சமயம் எதிர்பார்க்கின்ற வாழ்க்கைமுறை, உபதேசங்களையே இயேசுகிறிஸ்து உலகிற்கு கொண்டுவந்தார்.
வஞ்சித்த பாம்பு இந்த உண்மை மதத்தை வஞ்சிக்கும் மதமென்கிறது.
வஞ்சிக்கும் கிறிஸ்து என்கிறது. இதனாலேயே சமீபகால மதவாதிகள் கிறிஸ்தவம் மற்றவர்களை வஞ்சித்து தன்பக்கம் ஈர்க்கின்றது என்று கூறுகின்றது.
நியாயதீர்ப்பு வரப்போகின்றது.
எது வஞ்சித்தது, எது உண்மையானது என்று வெளிப்பட போகின்றது.
இயேசுவே நியாயாதிபதியாய் நியாயாசனத்தில் வீற்றிருந்து வஞ்சக ஆவிகளை வேரறுக்கப் போகின்றார்.
வஞ்சகன் நம்மை வஞ்சகன் என்பான்.
அசுத்தம் நம்மை அசுத்தமென்பான். என்றாலும் நம் விசுவாசத்தையும், நற்பணியையும் விடாதிருப்போமாக. வெற்றி நமதே. சத்தியம் ஜெயிக்கும்.
கர்த்தாவே உம் குமாரனைக்கொண்டு வஞ்சிக்கப்பட்ட உலகை மீட்க விரும்பினீர். அதை நிறைவேற்றினீர். இப்பொழுதும் உமது சத்திய ஆவியை கொண்டு வஞ்சிக்கும் ஆவிகளை அறியவைக்கின்றீர். உமக்கு நன்றி.