என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்.
If anyone enters by Me, he will be saved, (John 10 :9)
Jn10:1,7; Jn14:6; Mt7:13; Ro5:1,2; Eph2:18; Heb9:8-12; Heb10:19-22; Zec10:12.
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9)
யோவான் 10:1,7; யோவான் 14:6; மத்தேயு 7:13; ரோமர் 5:1,2; எபேசியர் 2:18; எபிரெயர் 9:8-12; எபிரெயர் 10:19-22; சகரியா 10:12.
இரட்சிக்கப்படுவான்:
இரட்சிப்பு என்பது காக்கப்படுதல், காப்பாற்றப்படுதல், தப்புவித்தல், சுகமாக்குதல் என்று பலவாறு பொருள்படும்.
பாவம் என்கின்ற தீமையினின்றும், நியாயபிரமாணம் கட்டளையிட்டுள்ள தண்டனையினிறும், நரகத்தின் வாசலினின்றும் தப்புவிக்கப்படுதலே இரட்சிப்பு.
இந்த மூன்று காரியங்களினின்றும் ஒரு மனிதன் தப்புவிக்கப்பட வேண்டுமெனில் அவன் இயேசுகிறிஸ்துவை மனதார விசுவாசித்து ஏற்றுகொண்டால் மட்டுமே.
நாம் விசுவாசித்து அவரை ஏற்றுக்கொண்டாலும் அவர் நம்மை தமது கிருபையினால் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிப்பு கிடைக்கும்.
இரட்சிப்பு என்பது முக்காலம் தொடர்புடையதாகும். கடந்த காலத்தில் செய்த பாவங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு நிகழ்காலத்தில் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது வருங்காலத்தின் நரக ஆக்கினைக்கு தப்புவிக்கப்படுவோம். (2கொரிந்தியர் 1:10).
மீட்பானது இரட்சிக்கப்படுகிறவர்களை தேவனோடும் அவருடைய மந்தைகளோடும் சேர்க்கிறது. அவர்கள் திரும்ப பாவம் செய்து வீழ்ந்து போகாமலிருக்க அவருடைய ஆவியானவர் கொடுக்கப்பட்டு காக்கப்படுகிறார்கள்.
இந்த இரட்சிப்பு இலவசமானது. யாகங்கள் வளர்த்தாலும், யோகாக்கள் செய்தாலும், நிஷ்டையில் ஆழ்ந்தாலும், துறவறம் பூண்டாலும், புண்ணிய ஷேத்திரங்கள் சென்றாலும், புண்ணிய நீராடினாலும் இந்த இரட்சிப்பை பெற முடியாது.
இயேசுகிறிஸ்துவின் வழியாக மட்டுமே இந்த மீட்பு கிடைக்கும். இதற்காய் தவம் கிடக்க வேண்டியதில்லை. கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவான் (ரோமர் 10:9).
ஜீவமார்க்கம் அவரே. கர்ம மார்க்கங்களினாலும், ஞானமார்க்கங்களினாலும், பக்தி மார்க்கங்களினாலும் இரட்சிப்பு கிடைக்காது. இயேசு மார்க்கம் வழிவந்தால் மட்டுமே இரட்சிப்பு கிடைக்கும்.
இரட்சிப்பை கொடுக்காதவர்களுக்காய் போராடுவதினால் பயன் என்ன? இரட்சிக்கமாட்டாதவர்களுக்காய் சிலை வைத்து பயன் என்ன? இவர்களெல்லாம் வரப்போகிற அழிவினின்று தங்களை காக்கவியலாதே.
இயேசு ஒருவரே உன்னை மீட்பார்.
உனக்காய் ஜீவன் கொடுத்தவர் அவரே.
உன்னை வாழவைப்பவரும் அவரே.
அவரிடம் வா…. அவர் வழிச் செல்… இரட்சிக்கப்படுவாய்..
கர்த்தாவே நீர் எங்களுக்கு தந்துள்ள இரட்சிப்புக்காய் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்.