38 வருஷம், வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று இயேசு அறிந்தார்.
an infirmity thirty-eight years.Jesus knew that he already had been in that condition a long time. (John 5:5,6)
Jn9:1; Mk9:21; Mk5:25f; Lk5:18; Lk13:11,16; Act3:2; Act9:33; Act14:8; Job13:26; Ps25:7; Jn21:17; Ps142:3; Heb4:13,15.
முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந்தான்.
படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். (யோவான் 5:6)
யோவான் 9:1; மாற்கு 9:21; மாற்கு 5:25f; லூக்கா 5:18; லூக்கா 13:11,16; அப்போஸ்தலர் 3:2; அப்போஸ்தலர் 9:33; அப்போஸ்தலர் 14:8; யோபு13:26; சங்கீதம் 25:7; யோவான் 21:17; சங்கீதம் 142:3; எபிரெயர் 4:13,15.
நம் இயலாமையை அறிகிறவர்:
இயேசுகிறிஸ்து மனிதரின் முகத்தை மாத்திரமல்ல, மனிதனின் இருப்பையும், இருதய எண்ணத்தையும் அறிகிறவர்.
இயேசுவின் ஊழிய காலத்தில் நீண்டகால வேதனைகளை அனுபவித்த மனிதர்களை தேடிச் சென்று சுகமளித்திருக்கின்றார். இந்த பணியை குறித்து தீர்க்கதரிசனங்கள் கூறும் ஒருசில வசனங்களை மாத்திரம் நினைவு கூருவோம்.
1. இயேசு சிறுமைபட்டவர்களுக்காக வந்தார். ஏசாயா 61:1-3.
சிறுமைப்படுதல் 3 விதங்களில் விளக்கப்பட்டுள்ளது.
– பொருளாதார ரீதியில் குறைவுபட்டு காணப்படுதல்.
– உடல் ரீதியாக அங்கவீனப்பட்டு
– வியாதிகொண்டிருந்து காணப்படுதல்.
– மன ரீதியாக நொறுங்கி – உடைந்து போகுதல்.
இந்த மூன்று வகையினரையும் மீட்டெடுப்பதற்காகவே தன் பிராயாசங்களை செலவிட்டார்.
2. இயேசு மனிதர்களின் பெலவீனங்களை நீக்கும்படியாக வந்தார். மத்தேயு 9:17.
இங்கேயும் உடல் ரீதியான, மன ரீதியான பெலவீனங்கள் உண்டு. அவைகளை சுமக்கவும், நீக்கவும், குணமாக்கவும் வந்தார். இதனை ஏசாயா 53:4,5,7 ல் காணலாம்.
3. இயேசு நமது பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார். 1 யோவான் 3;5. இதனை யோவான் 1;29 ல் யோவான் ஸ்நானகன் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுகுட்டி என்று கூறுகின்றார். எபிரெயர் 9:28.
பாவம் சிறுமைப்படுதலுக்கும், பெலவீனம் உண்டாவதற்கும் மூலகாரணமாயுள்ளது. பாவம் முழுவதுமாய் நீக்கப்பட்டாலொழிய நொறுங்குதல்கள், இடறல்கள், இடைஞ்சல்கள் நீங்கவியலாது.
பாவம் என்பது பட்டியல் சார்ந்தது மட்டுமல்ல. சிறுசிறு தவறுதல்கள், பிழைகள், குற்றங்கள், எதிர்மறையான அணுகுமுறைகள், மாறுபாடான செயலாக்கங்கள் போன்றவைகள் பலவும் கூட அதில் அடங்குகின்றது.
பாவமன்னிப்பு என்பது இருமுகம் கொண்டது.
ஒன்று செய்தவைகளுக்கெல்லாம் பிரதிபலனாகிய தண்டனை நீக்கப்பட்டது என்பதற்கான உத்திரவாதம் தருகிறது. இன்னொன்று இனி எந்த தவறை செய்தாலும் அதற்கான விலைகிரயத்தை கொடுத்துதானாக வேண்டும் என்ற கண்டிப்பு.
இதனை நாம் விளங்கிகொள்வோமெனில் விழுதல்களிலிருந்து நாம் விடுபடலாம்.
நம்மை அறிகிற , நம் நிலைமையை அறிகிற, நம் பாவங்களை மன்னித்து நம்மை குணமாக்கிய இயேசுகிறிஸ்துவில் இணைந்து வாழ்வதினால் மட்டுமே நாம் இந்த பாவம் நிறைந்த உலகில் பாவ கிரியைகளிலிருந்து தப்பிக்க முடியும்.
உன்னை அறிந்தவர்,
உன்னை அறிகிறார்,
உன்னை அறிவார். பயப்படாதே.
அவரை சார்ந்துக்கொள். அவரை உற்றுக்கேள்.
கர்த்தாவே, உம் குமாரனின் இரட்சண்ய கிரியைகளினால் எங்களை மீட்டெடுத்து பரிசுத்தவான்களோடு இணைத்துக்கொண்டீர். இனி நாங்கள் அவ்வித ஐக்கியத்திலிருந்து எந்த நிலையிலும் எங்களை விடுவிக்காமல் உம்மோடு இணைந்து, உம் குரல் கேட்டு, தேவ ஊழியர்களின் ஆலோசனை பெற்று வரைமுறைக்குள் எங்களை கட்டுப்படுத்தி வாழ எங்களுக்கு பேரருள் புரிய வேண்டுமாறு இறைஞ்சுகின்றோம்.