தேவாலயத்திலே விற்கிறவர்கள், காசுகாரர் இவர்களை துரத்தி எடுத்துகொண்டு போங்கள் என்றார்.

தேவாலயத்திலே விற்கிறவர்கள், காசுகாரர் இவர்களை துரத்தி எடுத்துகொண்டு போங்கள் என்றார்.

புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். (யோவான் 2:16)

மத்தேயு 21:12; மாற்கு 11:15; லூக்கா 19:45; உபாகமம் 14:22-26; லேவியராகமம் 19:30; சகரியா 4:6; சகரியா 14:21; 2கொரிந்தியர் 10:4; அப்போஸ்தலர் 19:24-27; 1தீமோத்தேயு 6:3-5; 2பேதுரு 2:3,13,14.

தேவாலயம் பரிசுத்தமான இடம்.

இந்த நாளின் தியானத்தில் தேவாலயம் எப்படிபட்ட இடமல்ல என்பதை குறித்து தியானிக்கலாம்.

– தேவாலயம் வியாபார ஸ்தலமல்ல.
– தேவாலயம் காணிக்கைகளை வசூல் பண்ணுகிற இடமல்ல.
– தேவாலயம் தலைவர்கள், இராஜாக்களை நியமிக்கிற இடமல்ல.
– தேவாலயம் மதசார்பற்றவைகளை பயன்படுத்துகிற இடமல்ல.
– தேவாலயம் நம் விருப்பங்களை நிறைவேற்றுகிற இடமல்ல.
– தேவாலயம் ஓட்டு போடும் இடமல்ல.
– தேவாலயம் நமது அடையாளங்களை மிகை படுத்தும் இடமல்ல.
– தேவாலயம் சண்டை பண்ணுகிற இடமல்ல.
– தேவாலயம் எதிர்த்து கேள்வி கேட்கிற இடமல்ல.
– தேவாலயம் நமது அழகு, ஐசுவரியம், அந்தஸ்து, கவுரவம் வெளிபடுத்தும் இடமல்ல.
– தேவாலயம் பாவிகளின் கூடாரமல்ல – மறைவிடமல்ல.
– தேவாலயம் இச்சைகளை நிறைவேற்றுகிற இடமல்ல.
– தேவாலயம் சந்தடிமிக்க இடமல்ல.
– தேவாலயம் உலகியல் காரியங்களை பேசுவதும், ஆலோசிப்பதுமான இடமல்ல.
– தேவாலயம் அரசியல், சமூக காரியங்களை பேசுகிறதும், ஆலோசிக்கிறதுமான இடமல்ல.
– தேவாலயம் பிற தெய்வங்களை
– சமயங்களை பற்றி பேசுகிற இடமல்ல.
– தேவாலயம் உரையாடல் நடத்துகிற இடமல்ல.
– தேவனை தங்களிஷ்டம் போல வளைக்கிற இடமல்ல.

இதை போலொத்த 5 காரியங்களை நீங்கள் பட்டியலிடுங்கள்.

தேவாலயம் என்பது என்னவென்று வரும் நாட்களில் நாம் தியானிக்கலாம்.

கர்த்தாவே உம் பிரகாரத்தை நாங்கள் உம்மாலேயே பெற்றுள்ளோம். நாங்கள் எங்களையே உம் பிரகாரத்தில் மிகை படுத்துகிறோம். இனி நாங்கள் அப்படியிராதபடியிருக்கு உமது கிருபையால் எங்களை கடாட்சித்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME