யோவான் பிரதியுத்தரமாக… நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவில் நிற்கிறார்.
யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன், நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். (யோவான் 1:26)
யோவான் 1:10,11; யோவான் 8:19,59; யோவான் 12:36; யோவான் 16:3; யோவான் 17:3,25; 1 யோவான் 3:1; லூக்கா 17:21; லூக்கா 23:34; லூக்கா 24:31; எபேசியர் 3:11; மல்கியா 3:1,2…
அன்று யூதர்கள் தங்கள் நடுவில் இருந்தவரை அறியாது சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தனர்….
அன்று சீஷர்கள் தங்களிடையில் இருந்தவரை அறியாது தூங்கவும், மீன்பிடிக்க திரும்பி போகவும், சண்டை போடவும், மறுதலிக்கவும், அவிசுவாசம் கொள்ளவும் செய்து அவரை இழந்தனர்..
ஆதிசபை தங்களில் இருந்த கிறிஸ்துவை அறியாமல் பண ஆசைக்கும், பதவிகளுக்கும், உலக சிற்றின்பங்களுக்கும் அடிமையாகி சபையை அசுசி படுத்தினர்….
துவக்க கால சபை தங்களில் வல்லமையாக கிரியை செய்த கிறிஸ்துவை அறியாமல் தப்பறை உபதேசங்களை உபதேசித்து கிறிஸ்தவ உண்மைகளை கலப்படமாக்கினர்…
மத்திப கால சபை தங்களிடையில் மறுமலர்ச்சியை உருவாக்கிய கிறிஸ்துவை அறியாமல் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை ஒவ்வொரு துண்டுகளாக பிரித்து பாகுபடுத்தினர்….
நவீன கால சபை தங்களில் கிரியை செய்யும் இயேசுவை அறியாது அசுத்தமானவைகளை கிறிஸ்துவின் சரீரத்தில் பூசி விதவிதமாக காட்சி பொருளாக்குகின்றனர்…..
இந்தியரிடையில் இயேசுகிறிஸ்து இருந்து செய்ததை மறந்து அவருடைய சரீரமாகிய சபையை அழித்தொழிக்க பரமபிரயத்தனம் செய்கின்றனர். ஆனால் முடிவில் சத்தியம் பூமியில் முளைத்துதான் ஆகும். அதை ஒருவரும் தடுக்கமுடியாது.
நம்மிடையில் கிறிஸ்து எப்படியிருக்கிறார் என்று விவிலியம் போதிப்பதை அறிவோம்…….
1. அவர் வேறுபாடில்லாதவராய் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்.. எபேசியர் 4:6……..
2. அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார்… 2கொரிந்தியர் 13;3,4……
3. அவர் நம்மில் செத்தவராக அல்ல, உயிருள்ளவராக பிழைத்திருக்கிறார்….. கலாத்தியர் 2:20……..
4. அவ்ர் உயிர்ப்பின் ஆவியாக நம்மில் இருக்கிறார்…. ரோமர் 8:9-11………
5. அவர் நம்மில் மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார்…. கொலோசெயர் 1:27……….
6. அவர் நம்மில் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறார்… 2கொரிந்தியர் 1:9..
7. அவர் நம்மில் எல்லாமுமாயிருக்கிறார்… கொலோசெயர் 3:11.
நிறசாயம், மொழிசாயம், குலாம், இனாம், தேசாய், மாநிலசாயம், ஜாதியும், மதசாயம் பூசபட்ட இயேசுவாக அல்லாது கிறிஸ்துவுக்குள் முழுமையான மாற்றம் பெற்ற யாவருக்குள்ளும் எல்லாமுமாயிருக்கிறார். கிறிஸ்து என்ற சாயல் மட்டுமே இருக்கும்….