வியாதியா.. நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். (யாத்திராகமம் 15:26)
2 இராஜாக்கள் 20:5; யோபு 5:18; சங்கீதம் 41:3,4; சங்கீதம் 103:3; சங்கீதம் 147:3; ஏசாயா 57:18; எரேமியர் 8:22; எரேமியர் 33:6; ஓசியா 6:1; யாக்கோபு 5:11-16.
இஸ்ராயேலர்
தேவனை நேசித்து, அவர் வழியில் நடந்து, அவர் கற்பனைகளுக்கு கீழ்படிந்து,
அவர் ஆவியை களிகூரச்செய்து, அவர் ஊழியக்காரர்களை கனப்படுத்தி, அவர் ஜனங்களை நேசித்து, வாழ்ந்தால் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகள் ஒன்றையும் அனுமதியார்.
ஏனெனில் அவரே பரிகாரி