விசுவாசியாமலிருக்கிறீர்கள்

நீங்கள் என்னை கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

I said to you that you have seen Me and yet do not believe. (John 6:36)
Jn6:26,30,40,64; Jn12:37; Jn15:24; Jn20:26-29; Lk16:28-31; 1Cor1:22; 1Pet1:8,9.

நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்றும் உங்களுக்குச் சொன்னேன். ( யோவான் 6:36 )

யோவான் 6:26,30,40,64; யோவான் 12:37; யோவான் 15:24; யோவான் 20:26-29; லூக்கா 16:28-31; 1கொரிந்தியர் 1:22; 1 பேதுரு 1:8,9.

கண்டும் விசுவாசிக்கவில்லை:

ப.ஏ ல் தேவன் தம்மை வெளிபடுத்துவதை கண்களினால் காண்பதற்கு தூதர்களைப்போன்ற காட்சிதான் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக தேவனை மனிதன் காண்பது சாத்தியப்படவில்லை. ஆனால் ஒருசிலர் தேவனை காணும் பாக்கியம் பெற்றிருந்தனர்.

பு.ஏ ல் தேவன் தம்மை தம் குமாரன் மூலமாக வெளிபடுத்தினார். இயேசுகிறிஸ்துவும் தன்னை கண்டவன் பிதாவை கண்டான் என்று கூறினார்.

இயேசுகிறிஸ்துவின் மனுஷீக வாழ்வில் அவரை பலவிதமாக மனிதர்கள் கண்டுக்கொண்டனர்.

– அவரை ஒரு சாதாரண யூதராக – யூத ரபீயாக கண்டுகொண்டனர்.
– இயேசுவை ஒரு சிறந்த தீர்க்கதரிசியாக கண்டனர்.
– இயேசுவை ஒருசிலர் மட்டுமே தேவ குமாரனாக கண்டனர்.
– சிலர் இயேசுவை மேசியாவாக – கிறிஸ்துவாக கண்டனர்.
– சிலர் இயேசுவை தேவ ஆட்டுகுட்டியாக – ஏசாயாவின் பாடுபடும் தாசனாக கண்டனர்.
– சிலர் இயேசுவை தாவீதின் மகனாக – சந்ததியாக – வேராக – கிளையாக கண்டனர்.
– இயேசுவின் மகிமையையும், மகத்துவத்தையும் கண்டவர்களும் உண்டு.
– இயேசுவின் அற்புதங்கள் இயேசுவின்மேல் கொண்ட அதீத பற்றுக்கு இடம் உண்டாக்கியது.

இவ்வளவு வெளிப்படையாக இயேசுவை இன்னார் என்று அறிந்திருந்தும் அவரை விசுவாசிக்காத யூதர்கள் இன்றுவரையிலும் அதன் வேதனையை அனுபவிக்கின்றனர்.

இக்காலத்தில் இயேசுவை அறநெறி போதகராக – அற்புதங்கள் செய்பவராக – சிறந்த மனிதராக – கன்னியின் சுதனாக – மரணத்தினின்று உயிர்பெற்றவராக – உயிரோடிருப்பவராக அறிந்திருந்தும் அவர்மேல் விசுவாசம் வைக்க , அவரை பின்பற்ற, அவரைபோல் மாற விருப்பமற்று கிறிஸ்தவத்தத்துக்கு எதிராக செயல்படுகிறவர்களும் அதற்குரிய பலனை அடைவர்.

அன்பானவர்களே! நீங்கள் அவரை உங்கள் வாழ்வில் பெற்று அனுபவித்தும், கண்டும், உணர்ந்தும் இருக்கிறீர்கள். எக்காரணத்திலும் பின்வாங்கிபோகத்தக்கதான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுக்குள் உருவாகாதபடி உங்களை காத்துகொள்ளுங்கள்.

கர்த்தாவே, உம் மகனை எங்களுக்கு காட்சிபொருளாக தரவில்லை. நாங்கள் அவரைபோல மாறவே எங்களுக்கு தந்தீர். உமக்கு நன்றி. குறைவுகளிலும், பலவீனங்களிலும், போராட்டங்களிலும் அவரை எங்களில் பரிபூரணமாக கொண்டவர்களாக இருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME