வந்தாள்.. கண்டாள்.. விழுந்தாள்.. கூறினாள்.
Mary came where Jesus was, and saw Him, she fell down at His feet, saying to Him,. (John 11:32)
Jn11:21,37; Jn4:49; Mt9:18; Lk5:8; Lk8:41; Lk17:15,16; Rev5:8,14; Rev22:8.
இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். (யோவான் 11:32)
யோவான் 11:21,37; யோவான் 4:49; மத்தேயு 9:18; லூக்கா 5:8; லூக்கா 8:41; லூக்கா 17:15,16; வெளி5:8,14; வெளி 22:8.
இழப்பிலும் கனம் செய்தவள்.
தன் சகோதரனின் வியாதியைக் குணமாக்கித் தங்களுக்கு உதவி செய்ய வராதிருந்தும் அவர்மேல் கோபம் கொள்ளாமலும், அவருக்குரிய மரியாதையைக் கொடுக்க தவறாமலும், அவருக்குரிய கனத்தைக் கொடுக்க தன்னைப் பக்குவபடுத்திக் கொண்டிருப்பதும் மரியாளின் சிறந்த உத்தம குணம்.
பெரிய மனிதர்கள் துக்க வீட்டுக்கு வந்தால் துக்க வீட்டு மனிதர்கள் பெரிய மனிதர்களின் கால்களில் விழுந்து வணங்குவதை முன் நாட்களில் நான் பார்த்திருக்கிறேன். மரியாளும் இதே முறைமையைதான் செய்திருக்க வேண்டும்.
இழப்புகள், சோதனைகள் போன்றவைகளில் பலவற்றை நாம் இழந்திருக்கலாம். ஆனால் நற்குணங்களையும், நற்செயல்களையும் நாம் இழந்து விடலாகாது.
விதவையாயிருந்தாலும் நற்கிரியைகள் செய்யும் குணம் கொண்டவர்களே கனத்துகுரியவர்கள் என்று பவுல் 1தீமோோத்தேயு 5:10 ல் கூறுகின்றார்.
தன் புருஷனை இழந்த வாலிப பெண் ரூத் தன் வாழ்வு அற்றுபோயிருந்தாலும் தன் மாமியாருக்கு செய்ய வேண்டிய நற்கிரியைகளை நல்ல மனசாட்சியுடன் செய்த நற்குணத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?
இழப்புகள் ஈடு செய்ய இயலாதவைகள் தான். அதனால் கசப்புகளையும், வெறுப்புகளையும், பகைமையையும் பாராட்டி பிரிந்து போய்விடுவதும், தங்களை மாய்த்துகொள்ள முயற்சி செய்வதும் நம்மை மேன்மைபடுத்தாது. நமது நற்குணங்களும், நற்கிரியைகளுமே நம்மை உன்னதம் வரையிலும் கொண்டு சேர்க்கும். மரியாளைபோல கனம் பண்ணுவதும், மரியாதைக் கொடுப்பதும் முக்கியமானவைகளாகும்.
கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரித்து, துதித்து வாழ்வதற்கே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது துக்கத்திலும், இழப்பிலும் அவரை தொழுதுகொண்டு அவரை உயர்த்தி மகிமைப்படுத்தி வாழ்வதே உன்னதமான ஆவிக்குரிய அனுபவம் ஆகும்.
ராஜாக்கள், அதிகாரிகள், போதகர்கள், மூப்பர்கள், வயது முதிர்ந்தோர் மற்றும் கனத்துக்குரிய யாவருக்கும் கனம் செலுத்துங்கள். அதை தேவன் விரும்புகின்றார்.
கனம்பண்ணுகிறதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ரோமர் 12:10.