நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்.
I am going away, and you will seek Me, and will die in your sin. (John 8:21)
Jn8:24; Lk16:22-26; 1Cor15:17,18; Eph2:1; Job20:11; Ps73:18-20; Pr11:7; Pr14;32; Isa65:20; Eze3:18,19.
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள், நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார். (யோவான் 8:21)
யோவான் 8:24; லூக்கா 16:22-26; 1கொரிந்தியர் 15:17,18; எபேசியர் 2:1; யோபு 20:11; சங்கீதம் 73:18-20; நீதிமொழிகள் 11:7; நீதிமொழிகள் 14:32; ஏசாயா 65:20; எசேக்கியேல் 3:18,19.
பாவங்களில் சாவீர்கள்:
இயேசு மானுட வாழ்வை முடித்து கொண்டு தான் வந்த இடத்துக்கு திரும்ப போகின்றார். அவர் போகுமுன்பதாக அவரின் நோக்கம் நிறைவேற இஸ்ராயேலர் ஒப்புகொடுக்க வேண்டும்.
இயேசு சென்றபின்பு இயேசுவை தேடும் காலம் வரும். இஸ்ராயேலர் மேசியாவின் வருகையை நம்பியுள்ளவர்கள். இயேசுவை நிராகரித்து வேறு மேசியாவை தேடினார்கள். இப்பொழுதோ உண்மை மேசியா பயணமாகின்றார். இஸ்ராயேலரின் விருப்பபடியான மேசியா இனி வரமாட்டார்.
இஸ்ராயேலர் மேசியாவை தேடிதேடி தங்கள் தங்கள் பாவங்களிலே சாவார்கள். எப்படியெனில் மேசியாவாக வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. விசுவாசிக்கவில்லை. பாவங்களைவிட்டு மனந்திரும்பவில்லை. எனவே அவர்கள் பாவம் அவர்களை கொல்லும்.
இஸ்ராயேலரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டால்தான் ராஜரீகம் வெளிப்படும். அவர்கள் பாவங்கள் கழுவபடுவதற்காகவே மேசியா இயேசுவாக வந்தார். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவை ஏற்றுகொள்வதற்கு பதிலாக மேசியாவாகிய இயேசுவை கொலை செய்து மேலும் மேலும் தங்கள் பாவங்களை பூர்த்தி செய்தார்கள். இதனால் அவர்கள் பாவம் அவர்களை கொல்லும். இந்த பாவ மரணத்தினின்று மீட்கபடுவதற்காக கிருபையின் காலம் இன்னும் அவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ராயேலர் மனந்திரும்புவது வரையிலும் அவர் பொறுத்திருக்கிறார். பாவத்திலிருந்து மீட்பு பெறுவதற்கான ஒரே வழி மனந்திரும்புதல் ஆகும். மனந்திரும்புதல் என்பது திரும்பி தகப்பனண்டைக்கு செல்லுதலாகும். தந்தையின் மடிக்கு திரும்புதலே மனந்திரும்புதல்.
பாவம் நம்மை கொல்லாதபடிக்கு இயேசுவை பின்தொடர்வோம். பாவம் நம்மை பின்தொடராதபடிக்கு மனந்திரும்பி குழந்தைகளாக மாறுவோம்.
கர்த்தாவே உம் குமாரனை கொண்டு எங்களை மீட்க விரும்பினீர். அதற்காய் அவரை அனுப்பினீர். நாங்கள் இந்த கிருபையை பின்பற்றி மீட்கபட்டு வாழ உதவி செய்யும்.