தேவனுடைய வீட்டில் நாம் என்னவாக இருக்கிறோம்

தேவனுடைய வீட்டில் நாம் என்னவாக இருக்கிறோம்?

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்றும் நாம் அதில் அவயவங்களாக இருக்கிறோம் என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது ஒன்றான மெய் சபை தேவனுடைய வீடாக எப்படி இருக்கிறது என்று கற்றுக் கொள்ளுவோம்.

தேவனுடைய வீடு எங்கே ஸ்தாபிக்கப்பட்டது?

எருசலேமிலே தேவனுடைய வீட்டை ஸ்தாபிப்பேன் என்று தேவன் தீர்க்கதரிசனமாக உரைத்து இருந்தார்.

Isa 2:2 கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.

  • தமிழில் ஆலயம் என்று மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள் ஆனால் அது கர்த்தருடைய வீடு என்று தான் எபிரெய வேதாகமத்தில் இருக்கிறது.
  • கர்த்தருடைய வீடு பர்வதங்களின் கொடுமுடியாகிய எருசலேமில் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
  • அந்த வீடு கர்த்தரின் பர்வதம் என்றும் தேவனுடைய வீடு என்று அழைக்கப்படுகிறது.

தேவன்  தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துமூலமாக  தம்முடைய வழியை ஜனங்களுக்கு போதித்தார்.

Isa 2:3 திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

Heb 1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

எருசலேமிலிருந்துதான் சகல சத்தியமும் சகல தேசத்தாருக்கும் கொண்டு போகப்பட்டது.

Act 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

இந்த தேவனுடைய வீட்டில் இருப்பவர்கள் மாம்ச பிரகாரமாக யுத்தம் செய்யக்கூடியவர்கள் இல்லை. அவர்கள் மண்வெட்டிகளையும் அரிவாள்களையும் பயன்படுத்தி இருதயம் என்னும் நிலங்களை பண்படுத்தி பலன்களை அறுவடை செய்கிறவர்கள்.

Isa 2:4 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

அந்த தேவனுடைய வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபை என்று அழைக்கப்படுகிறது.

1Ti 3:15 தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.

அந்த தேவனுடைய வீட்டில் நாம் எப்படி அங்கத்தினராக முடியும்?

நீங்கள் உங்கள் வீட்டில் எப்படி அங்கத்தினரானீர்கள்?

அந்த வீட்டில் நீங்கள் பிறந்தபடியினால் அந்த வீட்டில் அங்கத்தினரானீர்கள்.

தேவனுடைய வீட்டில் நாம் எப்படி அங்கத்தினராக முடியும்?

அந்த தேவனுடைய வீட்டில் நாம் பிறக்க வேண்டும்.

தேவனுடைய வீட்டில் நாம் எப்படி பிறக்க முடியும்?

Joh 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

  • அந்த தேவனுடைய வீட்டில் நாம் பிறக்க வேண்டும் என்றால்  பாவ மன்னிப்புக்கென்று  ஞானஸ்நானம் பெறும்போதுதான் பிறக்க முடியும்.

இந்த தேவனுடைய வீட்டிற்கு மூலைக் கல் யார்?

இயேசு கிறிஸ்து பிரதானமூலைக்கல்லாக இருக்கிறார்.

Luk 20:17 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?

Act 4:11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.

1Pe 2:7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;

அந்த தேவனுடைய வீட்டில் கிறிஸ்து மேற்ப்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராக இருக்கிறார்

Heb 3:6 கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; ,,,,

இந்த தேவனுடைய வீட்டின் அஸ்திபாரம் யார்?

அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரமாக இருக்கிறார்கள்.

Eph 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

  • தேவனுடைய வீடு தேவனுடைய வாக்குத்தத்தத்தின் படி எருசலேமில் அப்போஸ்தலர்2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
  • தேவனுடைய வீட்டுக்கு இயேசு கிறிஸ்து மூலைக்கல்லாக இருக்கிறார்.
  • தேவனுடைய வீட்டுக்கு அப்போஸ்தலர்கள் அஸ்திபாரமாக இருக்கிறார்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME