தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சி
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டது, ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். (ஏசாயா 60:15)
ஏசாயா 49:14-23; ஏசாயா 54:6-14; சங்கீதம் 48:2;சங்கீதம் 78:54,55; ஏசாயா 30:10; ஏசாயா 61:7; எரேமியா 33:11; எபேசியர் 2:6,7
இது நிரந்தர மகிழ்ச்சி.
இது பரலோகிலிருந்து வந்தது.
உலகிற்கு வந்தது.
உலகில் மனிதர்க்கு வந்தது.
மனிதனில் எவர் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறுகின்றாரோ அவர்கள் இரட்ச்சிக்கப்படுகின்றனர். இரட்சிக்கப்படுவோரின் இருதயத்தில் இந்த மகிழ்ச்சி தங்குகின்றது.
விவிலிய வாசிப்பு, அனுதின விவிலிய தியானம், அதிகாலை தனி ஜெபம், தொழுகை, கிறிஸ்தவ ஐக்கியம் மூலம் இது நமக்குள் வளர்கின்றது.
முடிவில் நம்மை அப்பா வீட்டின் சந்தோஷத்தில் பங்குகொள்ள வைக்கின்றது.