‘சிறுவனின் சீரிய சிந்தை’
இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஜந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்ளும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். (யோவான் 6:9)
மத்தேயு 14:13-21; மாற்கு 6:34-44; லூக்கா 9:10-17.
சிறுவன் குறித்து மத்தேயு , மாற்கு, லூக்காவில் இல்லை. யோவானில் மட்டுமே காணப்படுகிறது.
இந்த சிறுவனின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
இது இன்றைய சபைகளுக்கு தேவை.
அவனின் சிந்தை எத்தகையது?
1. தனக்குரியதை தன் வசமாய் வைத்திருந்தான். இது சிறுபிள்ளை குணம்.
– போகிற இடம் எவ்வளவு நாளாகும், அங்கே ஏதாவது கிடைக்குமா என்று தெரியாது. எனவே 3 ஆம் நாள் உணவையும் வைத்திருந்தான்.
– சேமிப்பை, சேமித்ததை தக்க வைக்கும் குணம் அவனிடம் இருந்தது.
தற்சமயம் நம்மிடையில் சேமிக்கும் குணம் இல்லை.
கண்டதையெல்லாம் அடையவேண்டும்.
கண்ட இடமெல்லாம் சுற்ற வேண்டும். இருப்பதை எவருக்காயினும் முன்பின் தெரியாது தாரை வார்க்கணும் என்ற குணம் அதிகரித்து விட்டது.
இது தன்னுடையதையே வைத்திராத குணம். இந்த குணம் அவனிடம் இல்லை.
இருந்ததை தக்க வைத்துகொண்டான்.
இதுவே வளர்ச்சிக்கான அணுகுமுறை.
ஒருநாள் அது பயன்படும்.
2. தன்னிடம் இருப்பதை வெளிப்படையாய் கூறினான்.
ஒளிவு மறைவு இல்லா வாழ்வு,
வெளிப்படை தன்மை.
தன்னிடம் இருப்பதை நேரம் வரும்போது சொல்ல வேண்டும்.
ஊரெல்லாம் தம்பட்டம் அடித்தால் திருடன் வந்து இருப்பதை கொள்ளையடிப்பான்.
சேமித்து வைத்ததை நேரம் வந்தபோது சொன்னான். எதனால்?
– தான் சேமிப்பதை சொல்வதினால் பிறரும் அந்த நிலைக்கு வரமுடியும்.
– இருப்பதை இல்லையென்று சொல்லும் குணம், இல்லாததை இருக்கிறது என்று சொல்லும் குணம் வீழ்ச்சிக்கு அடையாளம்.
– ஒரு இயக்கம், குடும்பம், சபை, நிறுவனத்துக்குள் ஒளிவு மறைவு இருக்கலாகாது.
இந்த கூடுகையில் இச்சிறுவனிடம் ஒளிவு மறைவு இல்லை.
3. தனக்குரியதை பிறருக்காக கொடுக்க முன்வந்தான்.
எப்படி?
– இயேசுவின் சிந்தையை அறிந்ததினால் செய்தியை கேட்டு அவர் உள்ளத்தை அறிதல் அவசியம்.
– ஜனங்களின் பரிதாப நிலையை கண்டதினால்.
– சீஷர்கள் அப்பத்துக்காய் அலைவதை கண்டதினால்.
தேவை வந்தபோது தேடி வந்து உதவினான். இயேசு தன்னையும், தன் உடைமையும் தந்தார். ஆனால் ஒரு சபை, நிறுவனம், குடும்பம் வளர இந்த உதவிகள், ஒத்தாசைகள் அவசியமானது.
4. தனக்குரியது தனக்கு தரும் திருப்தியைவிடவும், தான் பிறருக்காய் கொடுத்ததில் தனக்கு கிடைத்த திருப்தி மேலானதாயிருந்தது.
– தான் கொடுத்த உணவை நிரம்ப சாப்பிட்டான்.
– உதவியதால் உள்ளத்தில் மகிழ்ச்சியுண்டானது. ஜனங்கள் விரும்பி உண்பதை கண்டு மிகுந்த சந்தோஷமடைந்தான்.
– பலர் இவனை வாழ்த்துவதை அனுபவித்தான்.
– இயேசுவுக்கு கிடைத்த புகழை கண்டு வியந்தான்.
5. தேவனின் கிரியைகள் உண்டாக முன்னணியத்துக்கு வருவது நல்லது.
சிறுவன் மறைந்திருந்தால் அற்புதம் நடந்திருக்காது.
– உதட்டிலிருந்து கொடுப்பது வாயளவுக்கு வரும்.
– கையிலிருந்து கொடுப்பது பைக்கு வரும்.
– கடமைக்காக கொடுப்பது பலன் கொண்டு வராது. தசமபாகம் கடமையாகிப்போனது. ஆனதினால் தான் அது நற்பலனை தரவில்லை.
– ஆனால் உள்ளத்திலிருந்து கொடுப்பதே உள்ளத்துக்கு வரும்.
ஜெபம். கர்த்தாவே உமது மகன் மூலம் ஒரு சிறுவனின் தன்மைகளை நாங்கள் அறிய செய்தீர். நாங்கள் இந்த சிறுவனைபோல இருக்க, வாழ எங்களுக்கு உதவும். சிறுமைபட்டவர்களை அலட்சியம் செய்யாமல் வாழ கற்றுதாரும். ஆமென்.