மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பர்.
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். (சங்கீதம் 37:11)
மத்தேயு 5:5; யோவான் 14:27; பிலிப்பியர் 4:7; 1தீமோத்தேயு 6:11; யாக்கோபு 1:21; யாக்கோபு 3:13; சங்கீதம் 36:8; சங்கீதம் 72:7; சங்கீதம் 119:165; ஏசாயா 26:3; ஏசாயா 48:18; ஏசாயா 57:18-21.
கர்த்தர் கொடுத்த சமாதானத்தை
1.உண்டு பண்ண வேண்டும்.
2.பெருக செய்ய வேண்டும்.
3.சுமந்து செல்ல வேண்டும்.
4.விதைக்க வேண்டும்.
கர்த்தர் கொடுத்த சமாதானத்தை நாம் நம்மில் எவ்வளவுக்கெவ்வளவாய் நிலைநிறுத்துகின்றோமோ அவ்வளவாய் மனமகிழ்ச்சியாயிருப்போம்.
சமாதானத்தை இழப்பதற்குரியவைகளை நமக்குள் அனுமதித்தால் மனமகிழ்ச்சியை இழந்து பலவீனரும், வியாதியஸ்தரும், வறியவருமாய் ஆவோம்.