நான் உலகிலிருக்கையில் அவர்களை உம் நாமத்தினால் காத்துக்கொண்டேன்

நான் உலகிலிருக்கையில் அவர்களை உம் நாமத்தினால் காத்துக்கொண்டேன்.

I have kept; none of them is lost except son of perdition,that the Scripture might be fulfilled. (John 17:12)

John 6:37,39,40,70,71; John 10:27,28; John 13:18; John 18:7-9; Luke 4:26,27; Matthew 18:1-6,14; 1Thes 2:3.

நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன், நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன், வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. (யோவான் 17:12)

யோவான் 6:37,39,40,70,71; யோவான் 10:27,28; யோவான் 13:18; யோவான் 18:7-9; லூக்கா 4:26,27; மத்தேயு 18:1-6,14; 1தெசலோனிக்கேயர் 2:3.

காத்து வந்தேன்:

சீஷர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு சீஷர்களாக பணி செய்வதற்கு பிதாவானவரால் தெரிந்தெடுத்துக் கொடுக்கப்பட்டவர்கள். அவர்களை முன்குறித்து, தெரிந்தெடுத்து கொடுத்தது பிதாவாயிருந்தாலும் அவர்களை சீஷத்துவ பணிக்காக பயிற்றுவித்து விசுவாசத்தில் கவிழ்ந்து போகாமல் காத்து தேவ சித்தத்தை நிறைவேற்ற வைப்பது இயேசுவின் கடமையாகும். இயேசுகிறிஸ்துவினிமித்தம் இயேசுவை விட்டு பின்வாங்கிப்போனவர்கள் பலருண்டு. அவர்கள் பிதாவினால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களல்ல. ஆகையினால்தான் அவர்கள் பின்வாங்கிப்போனார்கள். கிறிஸ்துவின் அழைப்புக்கு மந்தை மந்தையாகசெவிகொடுத்து பின்பற்றியவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் அவரின் உபதேசத்தினாலும், கிரியையினாலும், வடிகட்டப்பட்டு தெரிந்துகொள்ளப்படுதலுக்கு சொந்தமானார்கள். அவர்களை இயேசு காத்துக் கொண்டு வந்தார்.

கிறிஸ்துவின் ஊழியக்கார்களாக இராதபடிக்கு அவர்களை இடற செய்ய பிசாசானவன் வானத்திலிருந்து அவர்கள்மேல் விழுந்தான். பேதுருவை வீழ்ச்சியடைய செய்ய பிசாசானவன் எவ்வளவோ முயன்றான். ஆனால் அவைகளின் மத்தியில் அவர்களின் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்காக ஜெபித்தார். இயேசுகிறிஸ்துவின் கண்டிப்பும், கடிந்துகொள்ளுதலும், உபதேசமும், ஜெபமும் அவர்களை சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து காத்துக்கொள்ளதக்க உபகரணமாயிருந்தது.

பல கிளைசபைகளை கொண்ட தேவ மனிதர்கள் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியக்காரர்கள் பிசாசின் உபாயங்களுக்கு அடிமைப்பட்டு பின்வாங்காதபடிக்கு அவர்களின் விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்புக்கு உரியவர்கள்.

சபைகளை நடத்தும் போதகர்கள் தங்களிடம் தரப்பட்டுள்ள மூப்பர்களை, விசுவாசிகளை விசுவாசத்திலும், கற்பிலும், நீதியிலும், தூய்மையிலும், சத்தியத்திலும் காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்புக்குரியவர்கள்.

குடும்பதலைவனாயிருக்கிறவர் தன் மனைவி, பிள்ளைகள், அவர்களின் குடும்பங்கள் ஆகியோரின் விசுவாசத்தையும், தூய்மையையும், நீதியையும், நடக்கையையும், கற்பையும் காத்துக்கொள்ளும் பொறுப்புக்குரியவர்கள்.

இவைகளில் பொறுப்புக்குரியவர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்யாதிருந்தால் ஏலியை போன்றவர்களாவோம். எச்சரிக்கையாயிருப்போம். சபை, குடும்பம், நிறுவனங்கள் அவரால் கொடுக்கப்பட்டதாகும். அவர் நம்மை நம்பி கொடுத்துள்ளார். கட்டாயம் நம்மிடம் நேரம் வரும்போது கணக்கு கேட்பார். தப்பமுடியாது.

ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபவத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். எபிரேயர் 2:10-15.

ADD YOUR COMMENT

Powered By Indic IME