இரட்சிப்பு

இரட்சிப்பு

தியான பகுதி – யோவான் 5:29 – 34.
(1தீமோ1:15). நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். (யோவான் 5:34)

ஜீவன் பெறுதல், விடுதலையடைதல், தப்புவிக்கப்படுதல், சுகமடைதல்.

இயேசுவே இரட்சகர் – உலக மீட்பர்.அவர் நம்மை இரட்சிக்க வந்தார். அதன் பொருளென்ன?

1. நமக்கு ஜீவன் தரும்படி வந்தார். யோவான் 10:10.
அவருடைய ஜீவனை.
நித்திய ஜீவனை தரும்படி வந்தார்.
மரண வாசலுக்குள் இருப்போருக்கு,
மரண வாசனைக்குள் இருப்போருக்கு,
மரண கட்டுகளுக்குள் இருப்போருக்கு ஜீவன் தர வந்தார்.
நாம் உயிரடையும்படி வந்தார்.
மரணமடைந்து மரணத்தின் கூரை ஒடித்தார்.
மரித்தோருக்கு ஜீவன் தந்து உயிர்பெற வைத்தார்.
– அவரிடம் வந்தால் ஜீவன் உண்டு. யோவான் 5:40,
– அவரை விசுவாசித்தால் ஜீவன் உண்டு. யோவான் 6:47
– நற்கருணையில் பங்கு பெற்றால் ஜீவன் உண்டு. யோவான் 6:54.
– அவரை அறிபவருக்கு ஜீவன் உண்டு. யோவான் 17:3.
– குமாரனை உடையவன் ஜீவன் உடையவன். 1 யோவான் 5:12.
– பவுல் கிறிஸ்து எனக்கு ஜீவன் என்றார். பிலிப்பியர் 1:21.
ஆம் இயேசு ஜீவன் தர வந்தார்.

2. நாம் சுகம் அடையும்படி வந்தார். மத்தேயு 8:16,17.
வியாதியிலிருந்து சுகம் அடையும்படி வந்தார்.

வியாதிகள்:
– பாவத்தினால் உண்டான வியாதிகள் உண்டு. அவைகளை அறிக்கை செய்ய வேண்டும். நீதிமொழிகள் 28:13. யாக்கோபு 5:16.
இனி பாவம் செய்யாமலிருக்க வேண்டும். யோவான் 5:14.
– சாத்தானால் உண்டான வியாதிகள் உண்டு.
சாத்தான் துரத்தபடும்போது இவ்வியாதிகள் நீங்குகின்றது. மத்தேயு 9:32.
தீராத வியாதிகளின் பின்னணியத்தில் சாத்தான் இருக்கக்கூடும்.
இயேசு அவ்விதம் செய்தார். அப்போஸ்தலர் 10:38.
இயேசு குணமாக்குகிறார். லூக்கா 6:19.
கிறிஸ்து குணமாக்குகிறார். அப்போஸ்தலர் 9:34.
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 1 பேதுரு 2:24.
அவருடைய வார்த்தைகளால் சுகம் உண்டாகியுள்ளது. மத்தேயு 8:8. சங்கீதம் 107:20.
இப்பொழுது இயேசு நம்மை குணமாக்க நமக்கு விசுவாச ஜெபம் தேவை. யாக்கோபு 5:15.
எனவே நாம் விசுவாசத்தில் பெருக வேண்டும்.

3. நாம் தப்புவிக்கப்படும்படி வந்தார்.
விடுவிக்கப்படும்படி வந்தார்.
– தண்டனையிலிருந்து தப்புவிக்க.
பாவத்தினால் உண்டான தண்டனை. சிறையிருப்பு, வறுமை, தரித்திரம் போன்றவை.
– தேவகோபாக்கினையிலிருந்து தப்புவிக்க.
இனி வரப்போகும் கோபாக்கினையின். 1 தெசலோனிக்கேயர் 1:10.
– நரக ஆக்கினையிலிருந்து தப்புவதற்காக. மத்தேயு 23:33,
நரகில் தள்ளுகிறவரும் அவரே,
நரகிற்கு தப்புவிப்பவரும் அவரே.
– பாவத்தின் பிடியிலிருந்து, அடிமைதனத்திலிருந்து. ரோமர் 6:6
– பொல்லாத உலகினின்று. கலாத்தியர் 1:4
– பொல்லாத மனுஷர்களிலிருந்து 2தெசலோனிக்கேயர் 3:2.
– சாத்தானின் பிடியிலிருந்து லூக்கா 8:2, 35.

அவர் இரட்சிக்கிறார். எவரையும், எப்பொழுதும், எங்கேயும் அவரால் இரட்சிக்க முடியும்.

கர்த்தாவே உமது இரட்சிப்புக்காய் காத்திருந்தோம். நீர் உமது மகன் இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் வழியாகவும், உயிர்த்தெழுதல் வழியாகவும் எங்களுக்கு ஜீவன் தந்து எங்களை இரட்சித்தீர். உமக்கு நனறி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME