கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

Lord,And to whom has the arm of the LORD been revealed? (John 12:38)

Jn15:25; Jn17:12; Jn19:24,36,37; 2Chr32:20; Mt15:7-9; Isa53:1; Ps44:3; Isa40:10,11; Isa51:5,6; Mt16:17; 2Cor3:14-18; 2Cor4:3-6; Eph1:15-19.

கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. (யோவான் 12:38)

யோவான் 15:25; யோவான் 17:12; யோவான் 19:24,36,37; 2நாளாகமம் 32:20; மத்தேயு 15:7-9; ஏசாயா 53:1; சங்கீதம் 44:3; ஏசாயா 40:10,11; ஏசாயா 51:5,6; மத்தேயு 16:17; 2கொரிந்தியர் 3:14-18; 2கொரிந்தியர் 4:3-6; எபேசியர் 1:15,16.

வெளிப்பட்டது:
கர்த்தராகிய இயேசு யெகோவா தேவனுடைய குமாரனாக இவ்வுலகிற்கு வந்தார். அவரை தேவகுமாரனாகவும், மனுஷகுமாரனாகவும், தன் ஆத்தும இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு விசுவாசிப்போருக்கு கர்த்தருடைய புயத்தின் பராக்கிரமம், வல்லமை வெளிப்படும். இஸ்ராயேலரின் நடுவில் கர்த்தர் தமது புயத்தை பலதடவைகளில் வெளிப்படுத்தினார். இஸ்ராயேலர் விசுவாசித்தாலும் இல்லாவிட்டாலும் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டாக தமது புயத்தை வெளிப்படுத்தினார். தேவனின் புயத்தின் பரிபூரண வெளிப்பாடாக இயேசுகிறிஸ்து தோன்றியுள்ளார். கர்த்தரின் புயமாக வெளிப்பட்ட இயேசுவை யாரொருவர் விசுவாசிக்கின்றாரோ அவருக்கு புயத்தின் வல்லமை வெளிப்படும்.

விவிலியத்தின் கருபொருளாகவும், உலக மீட்பராகவும் வந்துள்ள கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கின்றவர்களோடு தேவனின் புயமும், புயத்தின் கிரியைகளும் இருக்கின்றது. விசுவாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறவர்களின் புயங்கள் உடைக்கப்படும்படியாக கர்த்தருடைய புயம் வெளிப்படும். எதிர்வினையாற்றுவோர் மீட்கப்படவேண்டும் என்பதற்காகவே தமது புயத்தின் கிரியைகளை வெளிபடுத்தாமல் மவுனமாயிருக்கின்றார். இதனால் நாம் கிறிஸ்துவையும், அவரின் சரீரமாகிய சபையையும், விசுவாசகுடும்பங்களையும் வேரறுக்கலாம் என்று நினைத்து பாவத்தோடு பாவத்தை கூட்டுகிறவர்களின்மீது கர்த்தரின் புயம் சடிதியில் வெளிப்படும்.

விசுவாசிக்கின்றவர்களுக்கு அவருடைய புயம் பாதுகாப்பையும், அரவணைப்பையும், ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும் தர, விசுவாசியாதவர்க்கோ அவருடைய புயம் அழிவையும், வேதனையையும், இழப்பையும், சிறைப்படுதலையும் கொண்டு வரும்.

அவரின் புயத்தோடு உன் புயத்தை உரசிப்பார்க்காதே..
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். சங்கீதம்2:1-12.

ADD YOUR COMMENT

Powered By Indic IME