நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே

நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே.

எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
(யோவான் 2:10)

ஆதியாகமம் 43:34; உன்னதப்பாட்டு 5:1; சங்கீதம் 104:15

நல்லது

1. தேவன் எனக்கு நல்ல ஈவை தந்தார். ஆதியாகமம் 30:20; மத்தேயு 7:11

2. கர்த்தர் நல்ல வாக்குதத்தம் பண்ணியிருக்கிறார். எண்ணாகமம் 10:29; எண்ணாகமம் 14:7; உபாகமம் 4:22

3. நல்ல காரியம் சொன்னால். 1இராஜாக்கள் 8:18; 1 நாளாகமம் 17:26

4. நல்ல வேலைக்கு கைகளை திடப்படுத்தினான். நெகேமியா 2:18

5. என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. சங்கீதம் 45:1

6. நல்ல தைலத்திற்கு ஒப்பாயிருக்கிறது. சங்கீதம் 133:2

7. உமது நல்ல ஆவி . சங்கீதம் 143:10

8. மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம். நீதிமொழிகள் 17:22

9. நல்ல வழி பார்த்து நட. ஏசாயா 6:16

10. நல்ல கனி உண்டாயிருக்கிற மரம். எரேமியா 11:16

11. நானே நல்ல மேய்ப்பன். யோவான் 10:4

12. நல்ல பங்கை தெரிந்த மரியாள். லூக்கா 10:42

13. நல்ல போராட்டம் பண்ணு. 1தீமோத்தேயு 1:18; 2தீமோத்தேயு 2:3; 2 தீமோத்தேயு 4:7

விவிலியத்தில் நல்லவைகள் உண்டு. மிக நல்லவைகள் உண்டு. மிக உயரியவைகளும் உண்டு.

நல்லவைகளில் உலகியல் காரியங்கள் அடக்கம். மிக நல்லவைகளில் ஆவிக்குரியவைகள் அடக்கம். மிக உயர்ந்தவைகளில் உன்னதமானவைகள்- பரலோகத்துக்குரியவைகள் அடக்கம்.

நாம் மிக உயரியவைகளை தேடி, நாட அழைக்கப்பட்டுள்ளோம்.

கர்த்தாவே தமது குமாரனாம் இயேசு கிறிஸ்துவைபோல நாங்களும் மிக உயரியவைகளை தேடி, நாடி பெற்றுக்கொள்ளும் நல்ல இருதயம் உள்ளவர்களாய் எங்களை மாற்ற வேண்டுகிறோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME